Tuesday, February 19, 2019

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பொதுமக்களுக்கு விடுத்த முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பொதுமக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.

அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இலஞ்சம், ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள், அரச சொத்துக்களை முறைக்கேடாக பயன்படுத்தியமை தொடர்பான முறைப்பாடுகளை மாத்திரம், தமது ஆணைக்குழுவில் முன்வைக்குமாறு குறித்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை ஆராய்ந்த போது அவற்றில் அதிகளவான முறைப்பாடுகள் தேவையற்ற தொடர்பில்லாத முறைப்பாடுகளாக கிடைத்துள்ளன என்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. பெரும்பாலானவை தொடர்பற்ற முறைப்பாடுகளாக காணப்படுவதன் காரணமாக, அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இலஞ்சம், ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள், அரச சொத்துக்களை முறைக்கேடாக பயன்படுத்தியமை தொடர்பான முறைப்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளுமாறு, ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த நிலையில் முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் இறுதி திகதி, மார்ச் மாதம் 07 ஆம் திகதியுடன் நிறைவுபெறுவதாகவும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com