Sunday, February 10, 2019

ஒரு தொகை கஞ்சா போதைப்பொருள் பொதிகள், யாழில் மீட்பு - காவல்துறை.

யாழ்ப்பாணத்தில் கைமாற்றவிருந்த ஒரு தொகை கஞ்சா போதைப்பொருள் பொதிகளுடன், ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம், செம்மணி வீதியில் வைத்து நேற்று மாலை, வத்தராயன் தாளையடிப் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது 17 கிலோ 560 கிராம் கேரளா கஞ்சா போதைப்பொருள் பொதிகள் அவரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், யாழ். பிரதேச பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இணைந்து, இந்த கஞ்சா தொகையை மீட்டுள்ளனர்.

குறித்த கஞ்சா பொதிகள், தாளையடியில் இருந்து, விற்பனை செய்வதற்கு கைமாற்ற முற்பட்ட போதே, பொலிஸாரிடம் பிடிபட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட குடும்பஸ்தரிடம், யாழ்ப்பாணம் பொலிஸார் தற்போது தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இவரை, இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை, முன்னெடுத்து வருவதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com