Tuesday, February 19, 2019

சுகாதார அமைச்சருக்கு வந்த தலையிடி

சுகாதார அமைச்சை உடனடியாக ஜனாதிபதி தனது பொறுப்பின் கீழ் எடுக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமந்த ஆனந்த வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். அண்மையில் நாடாளுமன்றத்தில் பால்மா தொடர்ப்பில் கடும் விவாதம் நடைபெற்று இருந்தது. இந்த நிலையில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவைப் பரிசோதனை செய்வதற்கு எமது நாட்டில் போதுமான உபகரணங்கள் இல்லையென்றிருக்கையில், சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன எப்படி நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கு சான்றிதழ் வழங்குவார் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமந்த ஆனந்த கேள்வி எழுப்பினார்.

சுகாதார அமைச்சு என்பது விளையாட்டுக்குரிய ஒன்று அல்ல. சுகாதார அமைச்சு மிகவும் பொறுப்பு வாய்ந்த ஒன்றாகும். உயிர்களை காப்பாற்றும் அமைச்சாக சுகாதார அமைச்ச்சு இருக்கவேண்டுமே தவிர, நோயாளர்களை உருவாக்குகின்ற அமைச்சாக அது இருக்கக் கூடாது எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com