Thursday, February 28, 2019

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது, கண்ணீர் புகைப் பிரயோகம்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பத்தரமுல்லை, பெலவத்தை பகுதியில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக, இன்று ஆசிரியர்கள் பலர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமா,க குறித்த பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாக்கியதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாக கல்வி சேவையில் காணப்படும் சம்பள பிரச்சினைக்கு தீர்வு கோரியும், 30 மாத நிலுவை சம்பளத்தை வழங்க வலியுறுத்தியும் இப் போராட்டம் இடம்பெற்றது.

இந்த நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது காவல்துறையினரால் கண்ணீர்ப் புகை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்தியவர்கள் மீது, ஏற்கனவே காவல்துறையினர் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டிருந்தனர்.

எனினும் அதனை பொருட்படுத்தாது ஆர்ப்பாட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டமையால், ஆசிரியர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப் புகைத் தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com