Thursday, February 28, 2019

ஸ்திரமான அரசாங்கத்திற்கு, புதிய தேர்தல் முறையொன்று அவசியம் - தினேஷ் குணவர்தன

நாட்டில் ஸ்திரமான அரசாங்கத்தை அமைப்பதற்கு வழி வகுக்கும் புதிய தேர்தல் முறையொன்றுக்கு, விரைவாக செல்ல வேண்டும் என, மக்கள் ஐக்கிய முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்த்தன இதனைத் தெரிவித்தார்.

70 சதவீதம் தொகுதிவாரி முறையிலும், 30 சதவீதம் விகிதாசார முறையிலும் தேர்தல் நடத்துவதற்கான முறையை விரைவாக ஏற்படுத்த வேண்டும்.

நாட்டிலுள்ள மக்களுக்கு சிறந்த அரசாங்கமொன்று அவசியமாகும். காலம் தாழ்த்தாது ஸ்திரமான அரசாங்கத்தை அமைப்பதற்கு, புதிய தேர்தல் முறை அவசியமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com