Thursday, February 7, 2019

படுகொலை சதித் திட்டம் தொடர்பில் உண்மைகள் வெளிப்படுத்தப்படும் - ஜனாதிபதி நம்பிக்கை

முக்கிய பிரமுகர்களை படுகொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பான விசாரணைகள் இரண்டு வாரங்களில் சட்டமாஅதிபரிடம் கையளிக்கப்படவுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்த சதித் திட்டம் குறித்து விசாரணை நடத்தி வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சில நாட்களுக்கு முன்னதாக தம்மிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொண்டனர் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். விசாரணைகள் சுமுகமான முறையில் முன்னெடுக்கப்படுவதாகவும், விரைவில் உண்மைகள் வெளிப்படுத்தப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com