Thursday, February 7, 2019

படைப்புழுவின் ஆக்கிரமிப்பால் கைவிட்ட சோளப்பயிர்ச்செய்கையை, தற்போது மீள ஆரம்பிக்கலாம் - விவசாய திணைக்களம்.

நாட்டின் பல்வேறு மாவட்டங்களின் விவசாயிகளுக்கு பாரிய அச்சுறுத்தலாக இருந்த சேனா படைப்புழுக்கள், தற்போது நாட்டில் இருந்து முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக, விவசாய துறையின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டப்ளிவ்.எம்.ட்பிளிவ்.வீரகோன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் சிறுபோக பருவ காலத்தில் மீண்டும் சோள உற்பத்தியை, விவசாயிகள் எந்தவித அச்சமும் இன்றி ஆரம்பிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சேனா படைப்புழுக்கள் தற்போது முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் காலத்தில் 15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சோள உற்பத்தியை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக, விவசாய துறையின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டப்ளிவ்.எம்.ட்பிளிவ்.வீரகோன் தெரிவித்தார்.

அண்மைக் காலமாக நாடளாவிய ரீதியில் தீவிரமடைந்து வந்த சேனா படைப்புழுக்களின் தாக்கத்தினால், பல்லாயிரக் கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. இந்த படைப்புழுவின் தாக்கம் வாழைச் செய்கையையும் அதிகமாக பாதித்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.

அத்துடன் சேனா படைப்புழுவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விவசாய அமைச்சு நட்டஈடு வழங்க முன்வந்துள்ளதாக செய்திகள் வெளிவந்தன. எனினும் இதுவரை தமக்கான எந்தவித நட்டஈட்டையும் அரசாங்கம் வழங்கவில்லை என, விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com