Thursday, February 7, 2019

அமெரிக்க பாதுகாப்பு பிரிவுடன் எந்தவித உடன்படிக்கையும் மேற்க்கொள்ளவில்லை - பிரதமர் திட்டவட்டம்

அரசாங்கம், அமெரிக்க பாதுகாப்பு பிரிவுடன் எந்த வித உடன்படிக்கையும் மேற்க்கொள்ளவில்லை என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மறுப்புத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே பிரதமர் இவ்வாறு கூறினார். மேலும், அரசாங்கம் ஒருபோதும் அதுபோன்ற உடன்படிக்கையை செய்துகொள்ளவில்லை என்றும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, இதற்கு முன்னரும் இது போன்ற குற்றச்சாட்டுக்கள் தற்போதைய அரசாங்கத்தின்மேல் அண்மைய நாட்களில் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com