Friday, February 22, 2019

வட கிழக்கின் உடனடி அபிவிருத்திக்காக, நிதியமைச்சுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தை

வடக்கு- கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய, துரித அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக, தமிழ் தேசிய கூட்டமைப்பினர், நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் குறித்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. இதன்போது தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளின் உடனடி அபிவிருத்திகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில், உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com