Friday, February 15, 2019

மாகாண சபை வேண்டாம் எனின், அதனை அரசியலமைப்பிலிருந்து நீக்கி விடுங்கள் - மஹிந்த தேசப்பிரிய

மாகாண சபைத் தேர்தலை நடாத்த முடியாது என்றிருந்தால் மாகாண சபை முறைமையை அரசியலமைப்பிலிருந்து நீக்கி விடுங்கள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். பெப்ரல் அமைப்பின் 30 வருடம் நிறைவை முன்னிட்டு கொழும்பு நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

தேர்தலை நடாத்துவது அல்லது நடாத்தாமல் விடுவது தொடர்பில், அரசியல் குழுக்களுக்கு ஏற்ப விளக்கம் கொடுக்கப்படுகிறது. அவரவர்க்கு உகந்த நேரத்தில் தேர்தலை நடத்த கே கோரி நீதிமன்றம் செல்கின்றனர். இந்த நடவடிக்கை மூலம் தாம் நினைக்கும் நேரத்தில் தேர்தலை நடத்துவதை சரி என ஏற்றுக் கொண்ட மனப்பாங்கு கொண்ட சமூகமாக இன்றைய நிலை மாறியுள்ளது.

மாகாண சபைத் தேர்தலே முதலில் நடாத்தப்பட வேண்டும். மாகாண சபை வேண்டாம் எனின், தயவு செய்து அதனை அரசியலமைப்பிலிருந்து நீக்கி விடுங்கள். அத்துடன் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி வரையில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடாத்த முடியாது. அதுவரை நாம் மாகாண சபைத் தேர்தலுக்காக போராடுவோம் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com