Wednesday, February 13, 2019

தரமான தலைக்கவசங்களே இறக்குமதி செய்யப்படும் - அமைச்சர் அர்ஜூன ரணதுங்க

மோட்டார் சைக்கிள்கள் செலுத்தும் போது கட்டாயமாக பயன்படுத்தப்படும் தலைகவசங்கள், தரமானதாக இறக்குமதி செய்யப்படும் என்று போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் நேற்று, வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக பாடசாலை மாணவர்களுகாக நடத்தப்பட்ட செயலமர்வில் அமைச்சர் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். அநேகமான வீதி விபத்துங்கள் மோட்டார் சைக்கிள்களினாலே ஏற்படுகின்றன.

மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்கு உள்ளாகும்போது உயிரிழப்புகள் ஏற்படுகிறன. இதற்கு தரமற்ற தலை கவச பாவனையே காரணம் என்று
அமைச்சர் அர்ஜூன ரணதுங்க சுட்டிக்காட்டினார். இதனிடையே குறித்த நிகழ்வை வீதிபாதுகாப்பு தொடர்பான தேசிய சபை ஏற்பாடுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com