Sunday, February 10, 2019

காங்கேசன்துறை அபிவிருத்தி திட்டம் வெள்ளிக்கிழமை ஆரம்பம்.

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறைத் துறைமுக அபிவிருத்தித் திட்டம், எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த துறைமுக அபிவிருத்தி திட்டம், இந்திய நிதியுதவி கீழ் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கு 45.27 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம், மூன்று ஆண்டுகளுக்குள் பூர்த்தியடையும் என தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் துறைமுகங்கள், கப்பற்துறை அமைச்சர் சாகல ரத்நாயக்க உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள், இந்த திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை பலாலி விமான நிலைய அபிவிருத்தி திட்டமும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 2 பில்லியன் ரூபாய் செலவில் இந்த இரு அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுப்பதற்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக அரசாங்க தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com