Friday, February 22, 2019

கிளிநொச்சி - தர்மபுரத்தில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

கிளிநொச்சி - தர்மபுரம் 2ஆம் யுனிற் சம்பு குளத்திலிருந்து இளம் குடுப்பஸ்தர் ஒருவரின் சடலம், இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தர்மபுரம் மேற்கு 6 யுனிற்ரைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான 28 வயதுடைய அரசசிங்கம் கௌரியனந்தம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபரின் சடலம் வெட்டுக்காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளமையினால், இந்த சம்பவம் கொலையாகவிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்தநிலையில், தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com