பின் வாங்கும் ஆளும் கட்சி - மகிழ்ச்சியில் மஹிந்த அணி
இவ்வாரம் நடைபெறும் நாடாளுமன்ற அமர்வில் கூட்டரசாங்க பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று சபைத் முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
ஊடகம் ஒன்றிற்கு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார். நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் கூட்டரசாங்க பிரேரணை
உள்வாங்கப்பட்டிருந்த போதிலும், விரைவாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள முடியாத ஒரு நிலைமை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
புதிய கூட்டரசாங்க யோசனை குறித்து கட்சித் தலைவர்களுடன் தொடர்ந்தும் கலந்துரையாடலில் ஈடுபட்டு வருவதாகவும், பிரதமரின் முடிவின் பின்னர் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
புதிய கூட்டரசாங்க யோசனை பிற்போடப்படுவதனாது மஹிந்த அணியினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான கட்சிகளின் எதிர்ப்பை சம்பாதித்துள்ள கூட்டரசாங்க யோசனை ஆளும் கட்சியினாலும் நிறுத்தப்படுவதற்கான ஏது நிலை அதிகம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment