Saturday, February 16, 2019

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் விடுத்த முக்கிய அறிவிப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வழங்கியுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநரின் தலைமையில் மாகாணத்துக்குள் நடைபெறும் அரச நிகழ்வுகளில் ஆளுநரை வரவேற்பதற்கு சில கட்டுப்பாடுகளை வித்தித்து குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆளுநரின் தலைமையில் மாகாணத்துக்குள் நடைபெறும் எந்தவொரு நிகழ்விலும் மலர் மாலைகள், பொன்னாடை போர்த்துதல் மற்றும் நினைவுச் சின்னம் வழங்குதல் என்பவற்றை தவிர்ந்து கொள்ளுமாறு மாகாண அரச நிறுவனங்களுக்கு குறித்த அறிவித்தல் விடுக்கப் பட்டுள்ளது.

கிழக்கு மாகாண பிரதம செயலாளர், அமைச்சின் சகல செயலாளர்கள், பிரதிச் செயலாளர் மற்றும் திணைக்களத் தலைவர்கள் ஆகியோருக்கு ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்தனவின் கையொப்பத்துடன் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com