Wednesday, February 20, 2019

இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தில் கவனம் செலுத்தப்படும் விடயங்கள் இவைதான்

நாடாளுமன்றம் இன்று நண்பகல் 1 மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. இன்றைய அமர்வில் ஏற்றுமதி கட்டளைச் சட்டத்தின் இரண்டு கோவைவிதிகள் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளது.

இதேவேளை, இன்று மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டத்தில் கடந்தாலோசிக்கப்படவுள்ளது. ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான கயந்த கருணாதிலக இதனை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னர் நண்பகல் 12 மணியளவில் ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்றும் இடம்பெறவுள்ளது.

இது தவிர, போதைப்பொருளை பயன்படுத்துபவர்கள் நாடாளுமன்றத்தில் உள்ளார்கள் என்றால் அவர்கள் தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய, இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு அறிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்க தொலைபேசி ஊடாக சபாநாயகருக்கு நேற்று முன்தினம் அறிவித்திருந்த போதிலும், தொலைபேசியூடாக அறிவிக்காமல் எழுத்து மூலம் அறிவிக்குமாறு சபாநாயகர் தெரிவித்ததாக பாராளுமன்றத்தின் சிரேஸ்ட ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

எழுத்து மூலம் கிடைக்கப் பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துரையாடி இந்த பிரச்சினைக்கு
நடவடிக்கை எடுப்பதற்கு சபாநாயகர் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com