Saturday, February 2, 2019

தேர்தல் தொடர்பாக ஐ.தே.க. உறுப்பினர்களுக்கும், பிரதமருக்கும் இடையில், முக்கிய சந்திப்பு.

அடுத்து இடம்பெறவுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும் முறைமை தொடர்பாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்குமிடையிலான விஷேட கலந்துரையாடலொன்று அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று டம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட, அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டதன் படி ஒன்பது மாகாணங்களுக்குமான தேர்தலை நடத்துவதாக இருந்தால் ஆட்சிக் காலம் நிறைவடையாமலுள்ள ஊவா மாகாண சபை கலைக்கப்பட வேண்டும்.

அத்தோடு தேர்தல்கள் பழைய முறைமையில் நடத்தப்பட வேண்டும் எனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது ஆலோசனையில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில், புதிய தேர்தல் முறைமையில் நாடாளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களது ஒத்துழைப்புடனும் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளது.

இந்த இக்கட்டான நிலையில், ஒரு முடிவை எட்டும் முகமாக அடுத்த வாரம் கஇது தொடர்பான கலந்துரையாடலொன்றுக்குm பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தனது கட்சியின் உறுப்பிப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் என, அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com