Sunday, February 17, 2019

4 இலட்சத்திற்கு அதிகமான போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது - கஞ்சா தோட்டம் செய்த மற்றுமொருவரும் கைது

4 இலட்சத்திற்கு அதிகமான போலி நாணயத்தாள்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற ஒழிப்புப் பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது குறித்த நபர் பியகம, பேரகஸ்ஹந்திய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

40 வயதான சந்தேகநபர், மல்வானை பிரதேசத்தைச் ​சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவரிடம் இருந்து முப்பது எட்டு, 5,000 ரூபா போலி நாணயத்தாள்களும்,1,000 ரூபா போலி நாணயத்தாள்கள் 300 ம் , 500 ரூபா போலி நாணயத்தாள்கள் 165 ம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபரை மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, கொஸ்லந்த, மஹலந்த அம்பகொலஆர காட்டுப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா தோட்டம் ஒன்றை பொலிஸார் சுற்றி வளைத்து சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com