Tuesday, February 12, 2019

163 ஆம் இலக்க வீதியில் சேவையில் ஈடுபடும், தனியார் பேருந்து பணியாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு.

163 ஆம் இலக்க வீதியில் தெஹிவளை – பத்தரமுல்லைக்கிடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து பணியாளர்கள், பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் வழங்கப்பட்டுள்ள சுதந்திர பயண அனுமதிப்பத்திரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே, இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

இதேவேளை எரிபொருள் விலை சூத்திரத்திற்கு ஏற்ற வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதை அடுத்து, பேருந்து பயண கட்டணங்களும் அதிகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் பேருந்து பயண கட்டணங்களை அதிகரிக்க அனுமதி அளிக்கப்பட மாட்டாது என, நிதியமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com