Sunday, February 3, 2019

ஜனாதிபதியின் அனுமதியுடன் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு - கசிந்தது தகவல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியுடன் புதிய தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

நாடாளுமன்றத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை தேசிய அரசாங்க பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. இந்த பிரேரணைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தனது ஆதரவை வழங்கும் என அறிவித்துள்ளதாகவும் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com