Sunday, February 3, 2019

அனைவரையும் அரசுடன் இணையட்டாம்! அழைக்கின்றார் ரணில் விக்கிரமசிங்கே

ஐக்கிய தேசியக் கட்சியை தவிர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள வருமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

அலரிமாளிகையில் அபிவிருத்தித் திட்டமொன்றை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இந்த அழைப்புக் கோரிக்கையை முன்வைத்தார்.

நாம் கடந்த 2015 ஆம் ஆண்டு பாரிய சவாலுக்கு முகம்கொடுத்தோம். அந்த ஆண்டில் உலகில் அதிக கடன் பட்ட நாடுகளில் இலங்கையும் காணப்பட்டது. இருப்பினும், நாம் அவற்றை முகாமை செய்து மீண்டும் சுமுகமான நிலைக்கு கொண்டு வந்தோம். எமது இலக்குகளை வெற்றி கொண்டால், எம்மை யாராலும் தோற்கடிக்க முடியாது.

ஆகவே ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெளியில் உள்ள சகலரும் எம்முடன் இணைந்து செயற்பட வாருங்கள். நாம் ஒன்று பட்டால் எவருக்கும் எம்மைத் தடுத்து நிறுத்திவிட முடியாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்தார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com