Tuesday, January 8, 2019

இராணுவத்தினரால் கைதுசெய்யப்படவுள்ளார் நாமல் குமார.

நாமல் குமாரவை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியை கொல்ல மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சதியின் பிரதான சாட்சியாக காணப்படும் நாமல் குமார இராணுவத்திலிருந்து தப்பியோடிய குற்றசாட்டின் அடிப்படையில் இராணுவத்தினால் கைது செய்யப்படவுள்ளார்.

இவர் இராணுவத்திலிருந்து தப்பியோடிய குற்றசாட்டு தொடர்பாக விஷேட இராணுவ விசாரனை ஒன்றினை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அதனடிப்படையில் நாமல்குமார கைது செய்யப்படலாம் எனவும் இராணுவ ஊடக பேச்சாளர் பிரேகேடியர் சுமித் அதப்பத்து அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் இராணுவத்திலிருந்து தப்பியோடிய ஒருவருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எவ்வாறு எடுக்கப்படுமோ அதே அடிப்படையிலேயே நாமல் குமாரவும் விசாரிக்கப்படுவார் என அவர் தெரிவித்தார்.

குற்றப்புலனாய்வு துறையினரின் விசாரனைகள் நிறைவடையும் தறுவாயில் இருப்பாதால் அதன் பின் இராணுவத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் nதிரிவித்திருந்தார்.

மேலும் நாமல் குமார போலியான சான்றிதழ்களை தான் வழங்கியதாக ஒப்புக்கொண்டுள்ளதோடு அதற்காக இராணுவத்தினால் வழங்கப்படும் தண்டனை எதவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள தயார் என கூறியிருந்தமை குறிப்பிடதக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com