Tuesday, January 22, 2019

குற்றமிழைத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார்? - இன்று அறிக்கை

அண்மையில் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்ப நிலைமை தொடர்பிலான விசாரணை அறிக்கை இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். விசாரணைக்காக நியமிக்கப்பட்ட குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை சபாநாயகரிடம் சமர்பிக்கப்பட்டதன் பின்னர், குறித்த அறிக்கையை சபாநாயகர், சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கவுள்ளார்.

இந்த அறிக்கை மீது கவனம் செலுத்தும் சட்டமா அதிபர், குற்றம் இழைத்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட வேண்டிய சட்டநடவடிக்கை குறித்தும் ஆலோசனை வழங்குவார். விசாரணை குழுவினால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் ஒருவர் மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com