Wednesday, January 16, 2019

சங்காவிற்கும் தனக்கு நடைபெற்ற சந்திப்பு இதுதான் - அடித்து கூறுகிறார் அமைச்சர்

தனக்கும் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் அணியின் தலைவர் குமார் சங்கக்காரவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தொடர்பில் இல்லை என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அலரிமாளிகையில் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்தபோது, இருவருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அமைச்சர் மறுப்பான கருத்தை தெரிவித்துள்ளார். குமார் சங்கக்காரவுக்கும் தனக்கும் இடையில் வெறும் 10 நிமிடங்கள் மாத்திரமே கலந்துரையாடல் இடம் பெற்றதாகவும், அதன்போது சுகாதார வேலைத்திட்டங்கள் குறித்தே கவனம் செலுத்தப்பட்டதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், முன்னதாக இருவருக்குமான கலந்துரையாடல் 2 மணி நேரம் நடைபெற்றதாகவும், அதில், நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கும் வேர்ப்பாளர்தொடர்பில் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com