Monday, January 21, 2019

வெலிகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் காயம் - காவல்துறையினர்.

வெலிகம - பொல்வத்த பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த ஒருவர் மீது, துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று முற்பகல் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இனந் தெரியாத இருவர், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது காயங்களுக்குள்ளான நபர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்த காவல்துறையினர், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாக குறிப்பிட்டனர்.

இதேவேளை நேற்றைய தினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் பாதாள உலக குழுவொன்று, செயல்பட்டு வருவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்றைய தினம் கொட்டாங்சேனை - ஜிந்துப்பிட்டி பகுதியில் இனந்தெரியாத இருவர் துப்பாக்கி பிரயோகம் ஒன்றை மேற்கொண்டதன் பின்னர், தப்பிச் சென்றுள்ளள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை முன்னெடுத்து வரும் காவல்துறையினர், இந்த துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் பாதாள உலக குழுவின் தலையீடு இருப்பதாக கூறியுள்ளனர்.

அத்துடன் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக, காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com