யாழ் நோக்கி புறப்பட்டது உத்தரதேவி
உத்தரதேவி தொடரூந்து சேவையின் வெள்ளோட்டம் இன்று முன்னெடுக்கப்படுகின்றது. கொழும்பு, கோட்டையில் இருந்து – காங்கேசன்துறை வரையான தொடரூந்து பாதையில் இந்த பயணம் மேற்கொள்ளப்படுகின்றது. அமைச்சர் அர்ஜூன ரணதுங்க உள்ளிட்டவர்கள் இன்று காலை புதிய தொடரூந்தில் கொழும்பு – கோட்டை தொடரூந்து நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டனர்.
சுமார் 724 பயணிகள் ஒரே நேரத்தில் பயணிக்கும் தொடரூந்து பேட்டி வசதியை கொண்ட இந்த தொடரூந்தில் வாயு சீராக்கி வசதி கொண்ட முதலாம் வகுப்பு பெட்டியும் இரண்டாம் வகுப்பு பெட்டியும் பொருத்தப்பட்டுள்ளமை சிறப்பாகும். இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்டு வடக்கும் தெற்குக்கும் நல்லிணக்கத்தை குறிக்கும் வகையில் புதிய தொடரூந்து வண்டி சேவையில் ஈடுபடுத்தப்படுவது முக்கிய செயற்பாடாகும்.
இந்த தொடரூந்து வண்டியில் யாழ். பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப்பைகள், அப்பியாசப் புத்தகங்கள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்கள் கொண்டுசெல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment