Sunday, January 27, 2019

சோள பயிர்ச்செய்கை மேற்கொள்ளவேண்டாம் - விவசாயத் திணைக்களம்

பிரித்தானியாவிலிருந்து படைப்புழுவை ஒழிப்பதற்காகான உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு விவசாயத் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்கான பரிசோதனை மேற்கொண்டபோது அது வெற்றியளித்துள்ளதாக திணைக்களத்தின் விவசாயப் பணிப்பாளர் நாயகம் W.M.W வீரகோன் தெரிவித்துள்ளார். அண்மைய நாட்களில் வேகமாக பரவி விவசாய நிலங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய படைப்புழுவின் பரவும் வேகம் குறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறு இருப்பினும் மறு அறிவித்தல் வரை சிறுபோகத்தின்போது சோளப் பயிர்ச்செய்கையை கைவிடுமாறு விவாசாயிகளிடம் விவசாயத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, சோளப்பயிர் தவிர்த்த, பிற பயிர்களிலும் இந்தப் புழுவின் தாக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com