Wednesday, January 2, 2019

புலிகளுக்கு பயத்தில் எங்கள் பாதுகாப்பில் இருந்தவர்கள் தான் எங்களுக்கு எதிராக பேசுகின்றனர். போட்டுடைக்கிறார் மஹேஷ்.

வடக்கில் யுத்தம் நடைப்பெறும் போது புலிகளுக்கு பயந்து ஒழிந்து கொண்ட சிலர் இன்று வடக்கிலுள்ள மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் நிலவும் அந்நியோன்யத்தை சீர்குலைக்க முற்படுவதாக இராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

திவயின பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் மேற்கண்டவாறு போட்டுடைத்துள்ள அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வெள்ளத்தின் போது மட்டுமல்ல வடக்கில் ஏற்படும் சகல அனர்த்தங்களின் போதும் மக்களுக்கு உதவ இராணுவத்தினர் முன்வருவர் என்றும் முரண்பட்ட எண்;ணங்களைத் மக்கள் மத்தியில் உருவாக்க முயலும் சிலரின் இராணுவத்தினர் மீதான விமர்சனங்களை மக்கள் ஒரு போதும் நம்ப வேண்டாம் எனவும் கூறியிருந்தார்.

அத்தோடு இராணுவத்தின் பெயரை களங்கப்படுத்த முயல்பவர்கள் அன்று வடக்கில் இராணுவத்தினரின் பாதுகாப்பிலேயே இருந்தனர். இவ்வாறு பேசி திரிபவர்கள் வாய்ச் சொல் வீரர்கள் மட்டுமே எனவும் அவர் கூறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com