Friday, January 11, 2019

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு வட மாகாண ஆளுநர், விசேட கட்டளை.

எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும் என, வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் திங்கட்க்கிழமை வட மாகாணதிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், இந்த சிறப்பு விடுமுறைக்கான கட்டளையை கல்வி அமைச்சின் செயலாளருக்கு பிறப்பித்துள்ளார்.

வட மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 15ஆம் திகதி செவ்வாய்கிழமை, தமிழர்கள் தைத் திருநாளைக் கொண்டாடவுள்ளனர்.

இந்த பண்டிகையை முன்னிட்டு இந்த மாதம் 14ஆம் திகதி திங்கட்கிழமை, வடக்கு மாகாணத்தின் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கான உத்தரவை வட மாகாண ஆளுநர் வழங்கியுள்ளதாகவும், இந்த விடுமுறைக்கான மாற்றுப் பாடசாலை தினம், பின்னர் அறிவிக்கப்படும் என்று, வட மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com