Wednesday, January 30, 2019

கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு விலங்கு மாட்டியது ஊழல் மோசடி பிரிவு.

கைது செய்து வைத்திருந்த லொறி ஒன்றை விடுவிப்பதற்காக 25000 ரூபாவை லஞ்சமாக பெற்றபோது, ஊழல் மோசடித் தடுப்பு பிரிவினரால் ஸ்தலத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி.

கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் சட்டவிரோ மண் அகழ்வில் ஈடுபட்டவர்களை நேற்று கைது செய்யச் சென்ற பொலிஸார், மண் அகழும் மோசடிக்காரர்கள் தப்பியோடிய நிலையில் குறித்த லொறியினை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கெடுத்து சென்று தடுத்து வைத்திருந்தனர். லொறியை விடுவிப்பதற்காக உரிமையாளர் சென்றபோது, அதனை விடுவிப்பதற்காக 25000 பேரம்பேசிய பொறுப்பதிகாரி அதனை பெற்றுக்கொள்ளும்போது வசமாக மாட்டிக்கொண்டுள்ளார்.

இன்று மாலை 5.35 மணியளவில் பொலிஸ் நிலையத்தில் வைத்து குறித்த தொகை வழங்கப்பட்டபோது, பொலிஸ் நிலையத்தில் வைத்தே பொறுப்பதிகாரிக்கு விலங்கு மாட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com