Monday, January 7, 2019

கொலை சூழ்ச்சியின் விசாரணைகளில், அழுத்தங்களை கொடுக்க கூடாது - வாசுதேவ

நாமல் குமார தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் விரைவில் நிறைவு செய்ய வேண்டும் என, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அவர், இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.

முதலில் “நாமல் குமாராவால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் குறித்து, விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும். அதன் பின்னரே மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

இதற்போது இந்த சம்பவம் குறித்த விசாரணைகளில் ஏதேனும் சதித்திட்டம் இருக்கலாம் என்று வாசுதேவ நாணயகுமார சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

நாமல் குமாரவினால் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் பொலிஸார் முறையான விசாரணைகளை நடத்தி முடிக்க வேண்டும். மாறாக அவர் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துச் செல்வது சாட்சிகளை வலுவிழக்கச்செய்யும் செயல் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

இந்த விசாரணைகளின் போது, நாமல் குமாரவுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதுடன், பொலிஸார் தமது விசாரணைகளை முன்னெடுக்கும் போது, அழுத்தங்கள் கொடுக்காமல் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என, வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியவர்கள், உரிய முறையில் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com