Saturday, January 26, 2019

கைச்சாத்தாகவுள்ள திருட்டு ஒப்பந்தம் மூலம், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அநீதி - ஒருமீ சிவில் அமைப்பு.

வழமைபோலவே இந்த முறையும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அநீதி இலக்கப்பட்டுள்ளதாக, தொழிலாளர்களை பாதுகாக்கும் ஒருமீ சிவில் சமூக அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

நாளை மறுதினம் திருட்டுத்தனமாக கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்தாகவுள்ளதா தெரிவித்த ஒருமீ அமைப்பு, பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரம் மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவித்தது.

தமக்கு 1000 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என தொடர்ந்து பெருந்தோட்ட தொழிலாளர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வந்தாலும், அதில் எந்தவித பயனும் ஏற்படவில்லை. இப்போது அடிப்படை வேதனமாக வெறுமனே 700 ரூபாயை வழங்க முதலாளிமார் சாமெளனம் இணக்கம் வெளியிட்டுள்ளது.

இந்த இணக்கத்தை ஏற்றுக்கொண்ட, கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் நாளை மறுதினம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளன.

இந்த செயல்பாடு ஒரு அப்பட்டமான காட்டிக்கொடுப்பாகும். இந்த செயல்பாட்டை தாம் வன்மையாக கண்டிப்பதாக ஒருமீ சிவில் அமைப்பு தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com