Sunday, January 27, 2019

என் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை, ஆதாரத்துடன் வெளிப்படுத்துங்கள் - குமார வெல்கம.

தாம் போக்குவரத்து அமைச்சராக இருந்த போது பல மோசடிகள் இடம்பெற்றதாக, கோப் குழுவினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை அவர்கள் ஆதாரத்துடன் வெளிப்படுத்த வேண்டும் என, போது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் இலங்கை போக்குவரத்து சபைக்கு பேருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பாக கோப் குழுவினரின் அறிக்கை குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர், இன்றையதினம் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் வழங்கிய போதே இதனை கூறினார்.

கோப் குழுவினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கான சுயாதீனமான விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க நான் தயார்.

ஆனால் அவர்கள் என் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுக்களுக்கும் ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

போக்குவரத்து அமைச்சராக நான் இருந்த போது இலங்கை போக்குவரத்து சபைக்கு, ஒரு தொகுதி பேருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டன.

இதன்பொழுது எவ்விதமான நிதியுதவியும் எமக்கு வழங்கப்படவில்லை. மாதந்தக் கொடுப்பனவுகளின் ஊடாகவே பேருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டன.

அத்துடன் அமைச்சரவையின் அங்கீகாரத்துடனேயே குறித்த கொள்வனவு நடவடிக்கைகள் இடம்பெற்றன என நாடாளுமனற்ற உறுப்பினர் குமார வெல்கம மேலும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com