வௌிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வீடமைப்பு கடன்
வௌிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு கடன் வழங்கும் திட்டமொன்றை அறிமுகப்படுத்த நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வௌிநாட்டில் பணிபுரியும் ஒருவருக்கு 10 மில்லியன் ரூபா வீடமைப்பு கடன் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
15 வருடங்களில் மீளச் செலுத்தும் வகையிலும் 2 வருட நிவாரண காலத்துக்கு உட்பட்ட வகையிலும் இந்த கடன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வௌிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் பலர் தமக்கான வீடொன்றை நிர்மாணிக்கும் சந்தர்ப்பத்தை பெறுகின்றார்கள்.
எனவே வௌிநாட்டு பணிகளில் உள்ள இலங்கையர்கள் கணிசமான தொகையை இலங்கை வங்கிகளில் வைப்பீடு செய்துள்ளவர்களாக இருப்பாரானால் அவரகள் இந்த கடனை பெறும் தகுதியை பெறுகின்றார்கள். கடன் திட்டத்தின் வட்டியில் 75 வீதம் அரசினால் செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment