Monday, January 28, 2019

இரணைமடு விவகாரம் தொடர்பில் ஆழமான ஆராய்வு

இரணைமடு குளம் விவகாரம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இரணைமடுக்குள விவசாய சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்குமிடையில் நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் சென்றவாரம் ஆராயப்பட்ட விடயங்ககள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. வடக்கு மாகாணங்களின் ஐந்து மாவட்டங்களினதும் விவசாயிகள், பொறியியலாளர்கள், அரச அதிகாரிகள் ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தி குழுவொன்றை புதிதாக அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. .

கடந்த ஐம்பது வருடங்களில் கிளிநொச்சி, இரணைமடு மற்றும் இரணைமடு குளத்திற்கு நீர் வரும் பகுதிகள் போன்றவற்றில் பதிவாகிய
மழை வீழ்ச்சி மற்றும் குளத்தின் நீர் சேமிப்பு தொடர்பான முழுமையான அறிக்கையினை பெற்று விரிவாக ஆராய்ந்து, அதனடிப்படையிலேயே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தினை ஆளுநர் சுரேன் ராகவன் இதன்போது வலியுறுத்தினார்.

சென்ற வருடம் பெய்த மழை குறித்த பகுதியில் அதிகமாக பதிவான காரணத்தினால், இரணைமடு குளத்தின் நீர் கொள்ளளவு அதிகமாக காணப்படுகின்றது. இதன் காரணமாக இந்த நீர் முகாமைத்துவத்தை உரிய முறையில் பேணுவது தொடர்பில் விவசாயிகள் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆகியோருக்கு பயிற்சிகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஆளுநர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இரணைமடுக்குளத்தில் நீர் வற்றிப்போகும் காலப்பகுதியில் விவசாயம் மேற்கொள்ள முடியாமற்போகும் மக்களின் பொருளாதரா நிலைமையினை தொடர்ந்தும் பேண்தகு நிலையிலேயே வைத்துக்கொள்ள, சாத்தியமான வழிமுறைகள் தொடர்பாக ஆராயவேண்டியுள்ளது.

ஆகவே இது தொடர்பில் காப்புறுதி நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதனூடாக புதிய விவசாயக் காப்புறுதியொன்றை உருவாக்குவது தொடர்பாக ஆராய்வதாகவும் ஆளுநர் சுரேன் ராகவன் இதன்போது நம்பிக்கை தெரிவித்தார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com