Tuesday, January 8, 2019

சர்வதேச நீதிமன்றம் தேவையில்லை என்பது, நிரூபணம் - பிமல்

நாட்டின் அரசியல் நெருக்கடிகளை தீர்க்க,சர்வதேச நீதிமன்றங்கள் தேவையில்லை என்பது நிரூபணமாகியுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இதனை கூறினார். இலங்கை மீது சர்வதேச நாடுகள் பல அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றன.

சர்வதேச நாடுகளின் அழுத்தங்கள் குறித்து ஆளும் மற்றும் எதிர்த்தரப்பினரிடையே, தீவிரமாக விவாதங்கள் இடம்பெற்றன. ”சர்வதேச நீதிமன்றம் வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. வடக்கு- கிழக்கில் பிரச்சினைகள் நடைபெற்றுள்ளமை உண்மையே. அதனை நாமும் ஏற்றுக் கொள்கிறோம்.

ஆனால் இன்று இலங்கையிலுள்ள பிரச்சினையை இலங்கையிலேயே தீர்த்துக்கொள்ள முடியும் என்பது நிரூபனமாகியுள்ளது. அந்த விசாரணைகளுக்கு சர்வதேச நீதிமன்றம் தேவையில்லை.

எமது நாட்டு பிரச்சனைகளை, நாமே தீர்த்துக் கொள்வது சிறந்ததாகும் என, நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com