Sunday, January 13, 2019

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தல் - ஜனாதிபதி அறிவிப்பு.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தல் இடம்பெறும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். தேர்தலை உடன் நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை முன்வைத்து வரும் நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தற்போது 6 மாகாண சபைகளின் நடவடிக்கை ஸ்தம்பித்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, இது நாட்டின் ஜனநாயகத்திற்கு பாதகமானது என கூறினார். எனவே அடுத்து ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு முன்னர், மாகாண சபை தேர்தலையே நடத்த வேண்டும் என் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

இந்த மாகாண சபை தேர்தலில் மக்கள் தனக்கு தடையின்றி வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

அத்துடன் மாகாண சபை தேர்தல் சட்ட ரீதியாக நடைபெற வேண்டும் என கூறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேர்தல் விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்த மாகாண சபை தேர்தலை அடுத்து ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து தீர்மானிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com