Wednesday, January 2, 2019

மஹிந்த தலைமையில் பெரமுன செயற்படும் - பசில் அறிவிப்பு

மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையிலேயே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி செயற்படுமென்று பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய ஆண்டுக்கான செயற்பாடுகளை முன்னெடுக்கும் நிகழ்வு புதுவருஷ தினமான நேற்று நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்டது. பெரமுன கட்சி , நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெறும். இந்த நிலையில் நாட்டை கட்டியமைக்கவேண்டிய பொறுப்பு எமக்குள்ளது. இதனால் நாம் அதிகம் நாட்டுக்காக உழைக்கவேண்டும்.

மற்றைய கட்சிகளுடன் ஒப்பிடுகையில் மக்கள் நலம் சார்ந்த சேவைகளையே அனைவரும் எம்மிடம் இருந்து எதிர்பார்க்கின்றார்கள். அனைவரும் எதிர்பார்ப்பது போன்றே மக்களுக்கு சேவைகளை வழங்கும் இயலுமை எம்மிடம் உள்ளது என்றும் பசில் ராஜபக்ஸ தெரிவித்தார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com