Tuesday, January 15, 2019

நாணய நிதிய அதிகாரிகளுக்கும் இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பில் மாற்றம்

சர்வதேச நாணயநிதிய அதிகாரிகளுக்கும் இலங்கை பிரதி நிதிகளுக்கும் முன்னெடுக்க திட்டமிடப்பட்ட சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தனது உத்தியோக பூர்வ twitter தளத்தில் பதிவிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியம் அமைந்துள்ள அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் தற்போது பனிப்பொழிவு அதிகம் காணப்படுவதால், இந்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

எனினும் இந்த சந்திப்பு நடைபெறும் திகதி குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com