Wednesday, January 16, 2019

குறுகிய காலத்தில் சுதந்திரக் கட்சி பாரிய அழிவினையே சந்திக்கும் - மனுஷ எச்சரிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைக்கவுள்ளமை தொடர்பில் அவரிடம் வினவிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, கூட்டணி அமைக்குமாக இருந்தால் குறுகிய காலத்தில் சுதந்திரக் கட்சி பாரிய அழிவினையே சந்திக்கும் என அவர் எச்சரிக்கை செய்துள்ளார். பெரமுனவுடன் இணைந்து கூட்டணி அமைப்பதாகக்கூறும் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் வீணான சவாலுக்கு உள்ளாக வேண்டி வரும் என்பதை புரிந்து கொள்ளவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com