Thursday, January 3, 2019

விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் மீண்டும் 8-ல் ஆரம்பம்

நடைபெற்று முடிந்த கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள்கள் திருத்தும் இரண்டாம் கட்டப் பணிகள், எதிர்வரும் 8-ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.

சுமார் 10 நாட்கள் இந்த இரண்டாம் கட்ட திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி இந்த பணிகள் எதிர்வரும்17 ம் திகதி வரை மேற்கொள்ளப்படும். விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் 29 பாடசாலைகளில் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், இதற்காக 6 பாடசாலைகள் மூடப்படும் அதேநேரம் ஏனைய 23 பாடசாலைகள் மூடப்படாது.

இதனிடையே, கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் கடந்த வருடம் 23 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 31 திகதி வரை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com