Thursday, January 10, 2019

முதல் வருடத்தில் 625 ரூபா? - மக்கள் போராட்டத்திற்கான பதில் இதுதானா?

பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஊதிய அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை, நேற்று நடைபெற்றது. கொழும்பு நாரஹென்பிட்டியில் அமைந்துள்ள தொழில் திணைக்கள தொழில் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் முதற்கட்ட பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, தொழில் உறவுகள் மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சர் தயாகமகே, கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க, 22 தோட்ட கம்பனிகளின் நிறைவேற்று அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர்.

இந்த கலந்துரையாடலில், மூன்று வருடகால சம்பள அதிகரிப்பு ஒப்பந்ததிற்கு முன்வந்து முதல் வருட சம்பள அத்கரிப்பு 625.00 ரூபாவும், இரண்டாம் வருடம் சம்பள அதிகரிப்பு 650.00 ரூபாவும், மூன்றாம் வருடம் சம்பள அதிகரிப்பு 675.00 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது. ஊக்குவிப்பு தொகை 140.00 ரூபாவும், 80.00 ரூபா வரவு கொடுப்பனவும், 30.00 ரூபா விலைகொடுப்பனவும் மேலதிகமாக எடுக்கும் கொழுந்திற்கு கிலோ ஒன்றுக்கு 45.00 ரூபாவும் வழங்க உடன்பாடு எட்டப்பட்டது.
இதனை தொடர்ந்து கலந்துரையாடல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இதனை தொடர்ந்து முன்னெடுக்கப்பட இரண்டாம் கட்ட கலந்துரையாடல், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற் சங்கங்களுக்கும் தொழில் உறவுகள் மற்றும்; சமூகவலுவூட்டல் அமைச்சருக்கும் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்கவுக்கும் இடையில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது இரு அமைச்சர்களினாலும் பெருந்தோட்ட கம்பனிகளிடம் பேசி முடிவு எடுக்கபட்ட விடயங்களும், தீர்மானங்களும் முன்வைக்கப்பட்டன. இதனை பரீசிலித்த மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருவதாக கூறப்பட்டது.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com