Thursday, January 31, 2019

யோஷித ராஜபக்ஷவின் வழக்கை 29 ஆம் திகதிக்கு விசாரிக்க தீர்மானம்

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரின் பாட்டியான டேசி போரஸ்ட் ஆகியோருக்கு எதிரான வழக்கின் விசாரணையை கல்கிஸ்ஸ பிரதான நீதவான் மொஹமட் மிஹால் பிற்போட்டுளார். தெஹிவளை மிஹிந்து மாவத்தையிலுள்ள யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமான காணி மற்றும் சொத்துக்கள் சம்பந்தமாக வழக்கு நேற்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கை எப்.சி.ஐ.டி. பிரிவினர் தாக்கல் செய்திருந்த நிலையில் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நேற்றைய விசாரணையின்போது மன்றில் யோஷித ராஜபக்ஷ மற்றும் டேசி போரஸ்ட் ஆகியோர் ஆஜராகியிருந்தனர். இதன்போது பொலிஸ் நிதி மோசடி பிரிவினர், மிலேனியம் சிட்டியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் சந்தேகநபர்களின் பெயரில் இருந்த கூட்டுக்கணக்கு சம்பந்தமாக அதன் பணிப்பாளரிடம் வாக்குமூலம் பெறப்பட்டிருப்பதாகவும், அது சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

அதன்படி சட்டமா அதிபரின் ஆலோசனையை எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ் நிதி மோசடி பிரிவினர் நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வழக்கை எதிர்வரும் மே மாதம் 29ம் திகதிக்கு விசாரிக்க கல்கிஸ்ஸ பிரதான நீதவான மொஹமட் மிஹால் உத்தரவு பிறப்பித்தார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com