Tuesday, January 29, 2019

கலாபூசணம் அரச விருது விழா இன்று - கலைஞர்கள் 200 பேர் தெரிவு

கலைத்துறையின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவைகளை ஆற்றிய கலைஞர்களைப் பாராட்டி கெளரவிக்கும் கலாபூசணம் அரச விருது விழா இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பிற்பகல் 4 மணி அளவில் கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் நடைபெறவுள்ளது.

34 ஆவது வருடம் முன்னெடுக்கப்படும் இந்த நிகழ்வின் ஏற்பாடுகளை கலாசார அலுவல்கள் திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது. 9 மாகாணங்களை சேர்ந்த சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் கலைஞர்கள் 200 பேர் இதன்போது விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளனர்.

இசை, நடனம், இலக்கியம், கட்புல கலைகள், நாடகம், புகைப்படக் கலை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் நாட்டார் கலைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த சேவைகளை ஆற்றியவர்களுக்கு இந்த விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com