Wednesday, January 16, 2019

வடகிழக்கில் பாரிய துரித அபிவிருத்தி திட்டங்கள் 2000 மில்லியன் செலவில்

வடக்கு மற்றும் கிழக்கை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் தொடர்பில் பிரதமர் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது. இந்த இரண்டு மாகாணங்களின் பொருளாதாரம் மற்றும் சமூக ஊக்குவிப்புக்கான துரித அபிவிருத்தித் திட்டத்தை மேற்கொள்வதற்கு 2000 மில்லியன் ரூபாயை அரசாங்கம் செலவிடவுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதார அடிப்படை வசதி மற்றும் சமூக அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் வாழ்வாதார நிவாரணத்தை வழங்கி அந்த பிரதேச அபிவிருத்தியை துரிதபடுத்தும் பொருட்டு விசேட திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டது. பொருளாதார அடிப்படை வசதி, சமூக அடிப்படை வசதி, ஜீவனோபாயம் மற்றும் சுயதொழில் வாய்ப்பு, சிறிய கைத்தொழில்கள் மற்றும் தொழில் முயற்சி போன்ற 4 துறைகள் ஊடாக இந்த திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்காகவே 2000 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது.

இதற்கமைவாக விவசாயம், கைத்தொழில், கடற்றொழில் மற்றும் சேவைத் துறைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, இவை தொடர்பிலான வேலை திட்டங்கள் மேற்கொள்ள்ளப்படும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com