Wednesday, January 16, 2019

வேண்டாம் என்பதற்காக அல்ல, வேணும் என்பதற்காக நீதிமன்றத்தை நாடுவோம் - எஸ்.எம். சந்திரசேன

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, மாகாண சபைத் தேர்தலை நடத்த கட்டளை பிறப்பிக்குமாறு கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையத்தில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. அதில் கருத்துரைத்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், வட மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களின் முன்னாள் முதலமைச்சர்களினால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி தேர்தல் வேண்டாம் என்பதற்கு நீதிமன்றம் செல்லவில்லையெனவும், தேர்தலை நடாத்துமாறு கோரியே நீதிமன்றத்தை நாடுவதாகவும் கூறினார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com