Tuesday, December 25, 2018

மாத்தறை துப்பாக்கிச்சூட்டு சந்தேக நபர் விசேட அதிரடிப் படையினரால் கைது.

இன்று காலை தங்கல்ல, குடாவெல்ல மீன்பிடித்துறை முக பகுதிக்கு மோட்டார் சைக்கிள் ஒன்றில் சென்ற இருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் நால்வர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதுடன் 7 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக மாத்தறை மாவட்டத்திற்கு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவைச் சேர்ந்த குழுவொன்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தலைமையில் விரைந்திருந்தது.

இந்நிலையில் அங்குலான பகுதியை சேர்ந்த கல்டமுல்ல கயன் என்றழைக்கப்படும் நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். இவன் கொழும்பில் இயங்கிய பிரபல தாதாவான அங்குலான ரொகா என்றழைக்கப்படுபவனின் சகாவான். அங்குலான ரொகா விளக்க மறியலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். ரோகா உள்ளே உள்ளபோது அவனது கொந்தராத்து கொலைகளை இந்ந கயன் என்பவனே மேற்கொள்பவன் என்று அறியமுடிகின்றது.

மேற்படி கொலைகள் கொந்தராத்து கொலையாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இரு மீன்பிடிக்குழுக்களுக்கிடையில் சற்று நாட்களுக்கு முன்னர் மோதல் ஒன்று இடம்பெற்றதாகவும் பின்னர் அவர்கள் இவ்வாறான கொலைக் கொந்தராத்தை வழங்கியிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகின்றனர்.

கொல்லப்பட்டவர்களில் ஒருவர் சந்தைக்கு மீன் கொள்ளவனவு செய்யச் சென்ற 23 வயது இளைஞன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com