Wednesday, December 19, 2018

டிஐஜி நாலக டி சில்வா வின் விளக்க மறியல் நீடிப்பு. ஹொங்கொங் சென்ற சிஐடி குழு நாடு திருப்பியது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி 02ம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேநேரம், மேற்படி குற்றச்சாட்டினை முன்வைத்த நாமல் குமாரவின் தொலைபேசியில் இருந்து அழிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் ஒலிப்பதிவுகளை மீள பெற்றுக்கொள்வதற்காக கடந்த 8 ஆம் திகதி இரவு ஹொங்கொங் நோக்கி சென்ற குழுவினர் கடந்த 14 ஆம் திகதி நாடு திரும்பி வந்துள்ளனர்.

சிஐடி யினர் சந்தேகித்ததன் பிரகாரம், தொலைபேசியிலிருந்து அழிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் ஒலிப்பதிவுகள் பலவற்றை குறித்த தொலைபேசி நிறுவனத்தால் மீளப்பெற முடிந்துள்ளது.

அவ்வாறு மீளப்பெறப்பட்ட ஒலிப்பதிவுகள் அடங்கிய பென் டிரைவ் (Pநn னுசiஎந) இன்று (19) குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கோட்டை நீதவான் நீதிமன்றத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.

மேலதிகமாக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குறித்த ஒலிப்பதிவுகள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com