மஹிந்த ராஜனாமா செய்துவிட்டாரா?
இன்று மேன்முறையீட்டு நீதிமன்று இடைக்கால தடை உத்தரவை நீடிக்க மறுத்ததை தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினருடனான சந்திப்பு ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது.
எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக இங்கு பேசப்படுவதாக அறியக்கிடைக்கின்றது.
இச்சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக்ச அவர்கள் பதவியை ராஜனாமா செய்துகொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ச த சில்வா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சட்டரீதியாக உரித்தற்ற போலி பிரதமர் பதவியிலிருந்து அவர் ராஜனாமா செய்து கொண்டுள்ளதாக ஹர்ச த சில்வா இலங்கை நேரம் பிற்பகல் 6.36 க்கு பதிவிட்டுள்ளார்.
எது எவ்வாறாக இருந்தாலும் மைத்திரி – மஹிந்த தலைமையிலான கலந்துரையாடல் இதுவரை முடிவடைந்து உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment