Sunday, December 9, 2018

மஹிந்தவும் ரணிலும் ரகசியமாக என்ன பேசுகின்றார்கள் என்பதை அறிய மக்களுக்கு உரிமை உண்டு.

மஹிந்த ராஜபக்ஷ ரணில் இருவரும் பாராளுமன்ற நூலகத்தில் இரசிய பேச்சுவார்தையில் ஈடுபட்டிருந்தனர். இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தல் வேண்டும் என மக்கள் விடுதலை முன்னனியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க அவர்கள் கடந்த 6ம் கம்பாஹவில் நடைப்பெற்ற கூட்டம் ஒன்றில் கூறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியினால் கடந்த 26ம் திகதி பிரமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்ததோடு ஜனநாயத்தை எட்டி உதைத்து வீசினார். இதற்;கு எதிர்ப்ப தெரிவிக்கும் வண்ணம் மக்கள் விடுதலை முன்னனியினால் நாடு ழுழுவதும் 'சர்வாதிகார வெறியை தோற்கடிப்போம், ஜனநாயத்தை பாதுகாப்போம்' எனும் தொனிப் பொருளில் நடாத்தப்படும் கூட்டத்தின் போதே இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் ம.வி.மு தலைவர் உரையாற்றுகையில்

பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரும் போது விவாதத்தின் கணத்கெடுப்பு நடத்தியமையை வரலாற்றில் எழுத வேண்டும். மஹிந்த அவர்களுக்கு சார்பானவர்கள் 100 பேர் 102 பேர் என கணக்கிடுகின்றனர். ஆத்தோடு அவருக்கு சார்பானவர்கள் பராளுமன்றத்திற்து கூட வருவதில்லை.இதன் ழூலம் மஹிந்த அவர்களின் பலம் தெட்ட தெளிவான உள்ளது.

ஜனநாயகத்தின் காவல் தெய்வமாக ரணில் விக்கிரம சிங்க தன்னை கூறி கொள்ள முற்படுகிறார்.அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாக புலம்பி திரியும் இவர் சிங்கபபுரிற்கு சென்று ஒப்பந்தங்களுக்கு கையெர்ப்பமிடும் போது எங்கே போனது அரசியலமைப்பு சட்டங்கள்? அதுமட்டுமா திருகோணமலை எண்ணெய் வளம் தொடர்பான சட்டமூலங்கள் கொண்டு வந்த போது பொருளாதார கொள்கையை மீறியமை ஜனநாயகம் ஆகாது.

ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாராளுமன்றம் நாடக மேடையாகியுள்ளது. எல்லா செயற்பாடுகளிலும் குள்ள நரியாகவே செயற்பட்டு வருகிறார்.

யாருக்கும் நினைத்தப்படி அரசாங்கம் அமைக்க முடியாது. அனைவரும் பாராளுமன்றத்தினுள் 113 பெரும்பான்மையை பெற்றுக் கொண்டது பணத்தினால் தான். மக்கள் பிரதிநிதித்துவம் எங்கும் இல்லை. நாட்டினுள் நடைபெறும் இத்தகைய சூழ்;ச்சிகளையும் தேச துரோக செயற்படுகளையும் தொடர்ந்தும் நாம் அனுமதிக்க போவதில்லை.

ரணில் விக்கிரமசிங்க மஹிந்த இருவரும் 20 நிமிடங்கள் இரகசிய பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக மக்களுக்கு இவர்கள் தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

ம.வி.மு செயலாளர் விஜித ஹேரத் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கலைத்துறையினர் சட்டத்தரனிகள் ஆகியோரும் உரையாற்றினர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com